இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என வந்த விளம்பரத்தை நம்பி பணம் முதலீடு செய்து மோசடிக்கு ஆளானார். இது குறித்து அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, மோசடியில் இழந்த ₹10.92 லட்சம் ரூபாய் பணத்தை தடயமறித்து மீட்டனர். மீட்கப்பட்ட தொகையை, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் உரிய நபரான கண்ணனிடம் இன்று வழங்கினார். சைபர் மோசடி அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாமென போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















