திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில், இன்று காலை திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பொன்மணி சித்ரா மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் லக்கேஜ் வைக்கும் கேரியரில் கேட்பாரற்றுக் கிடந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது. இரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா