திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி ஆகிய வழக்குகளில் தொடர்புடைய சிங்கிகுளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்களான முத்துமாரி (21). ஞானபாண்டியன் (19). ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறி, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய களக்காடு காவல் ஆய்வாளர் கண்ணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, விற்கு அறிக்கை அளித்தார். அதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று ஆட்சியர் இரா.சுகுமார் பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்