கடலூர் : கடலூர் சிதம்பரம், புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரும்பு தளவாட பொருட்களை மர்மநபர்கள் திருடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில், இருந்த புதுச்சத்திரம் காவல்துறையினர், அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் காவல்துறையினர், மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இது தொடர்பாக ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர், கைது செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி. வினதா, தலைமையிலான காவல்துறையினர், புதுச்சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜி (28), குறவன் மேடு பகுதியை சேர்ந்த வினோத் (26), ஆகிய 2 பேரை கைது செய்தனர்.















