கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் காட்டேரி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது சேலம் To திருப்பத்தூர் ரோடு ஒன்னகரை ரோட்டின் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 3 யூனிட் M – Sand இருந்தது, அனுமதியின்றி M – Sand கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
















