தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசைவனத்துரை என்பவர் கடந்த (26.11.2025) அன்று தனது உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு செல்வதற்காக ஒரு பேக்கில் சுமார் 18 பவுன் தங்க நகைகளுடன் விட்டை விட்டு வெளியே கிளம்பி அந்த பேக்கை வீட்டின் அருகில் வைத்துவீட்டு மற்றொரு பேக்கை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்று திரும்பி வந்து பார்த்தபோது மேற்படி நகைகள் உள்ள பேக் திருடு போனது அவருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து இசைவனத்துரை அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ்குமார் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. இன்னோஷ்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திருமதி. காந்திமதி, திரு. குமார் மற்றும் போலீசார் மேற்படி சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி குரும்பூர் கூரந்தாவிளையைச் சேர்ந்த முத்து மகன் வைகுண்ட வாசகன் (எ) வைகுண்டம் (29). மற்றும் திருச்செந்தூர் அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஜயகுமார் (27). ஆகியோர் மேற்படி தங்க நகை உள்ள பேக்கை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரிகள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். மேலும் இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















