திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட பொட்டல் பகுதியை சேர்ந்த முத்து கருப்பன்(40). மற்றும் பாலநேசன் (36). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணைக்கு 1 1/2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் இருவருக்கும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருவரையும் தாலுகா காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (04.09.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்