தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (12.09.2025) தீடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு காவல்துறையினரின் போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.