திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (57). தொழிலாளியான இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், நான்குனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து (16.09.25) அன்று தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்