வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேரணாம்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.இளங்கோவன் மற்றும் திரு.ராமானுஜம், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பேரணாம்பட்டு M.G.R நகர் என்ற இடத்தில் சோதனை செய்தபோது குற்றவாளி சின்னப்பையன் M.G.R நகர் பேரணாம்பட்டு என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்கள் சுமார் 135 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















