திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்து வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் எரியோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு கரூரில் தலைமறைவாக இருந்த பாகாநத்தத்தை சேர்ந்த (35). வயது பெண் 12-ம் வகுப்பு படிக்கும் (17). வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா