திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் திருநெல்வேலிமாநகர காவல் துறை சார்பாக கலந்துகொண்ட மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர், மகேஸ்வரி பூப்பந்து ஒற்றையர் பிரிவில் இரண்டாவது இடத்தையும், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தையும், தலைமை காவலர் முத்துக்குமார் பூப்பந்து ஒற்றையர் பிரிவில் முதலிடமும், பெண் தலைமை காவலர்,கற்பக ராஜலட்சுமி பூப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடத்தையும், காவல் உதவி ஆய்வாளர், செல்வி சுவாதிகா கைப்பந்து போட்டியில் முதலிடமும், காவலர் கிருஷ்ணவேணி 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தையும், முதல் நிலை காவலர் ரேணுகா தேவி 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும், காவலரஉத்தண்டம் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவரையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., (17.09.2025)ஆம் தேதி நேரில் அழைத்து பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் மரு.V.பிரசன்ன குமார் இ.கா.ப, (மேற்கு) V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்